ஞானசார தேரருக்கு எதிரான வழக்கொன்று இன்று ஒத்திவைப்பு

295 0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் தொடுக்கப்பட்டிருந்த மற்றுமொரு வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதவான் நேரஞ்ஜன டி சில்வா இன்று (07) இந்த உத்தரவை விடுத்துள்ளார்.

ராஜகிரிய நாவல பாதையில் போதைப் பொருள் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவரின் கடமைக்கு தடையாக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஞானசார தேரருக்கு வழக்கில் ஆஜராக நீதிமன்றத்துக்கு வர முடியாது என தெரிவித்து வைத்தியர்களினால் வழங்கப்பட்ட கடிதத்தை வைத்து நீதிபதி இந்த தீர்ப்பை இன்று வழங்கியுள்ளார்.

Leave a comment