மஹிந்தவின் பாதுகாப்பையும் குறையுங்கள்- நலின்

314 0

மஹிந்த ராஜபக்ஷ தற்பொழுது பிரதமர் அல்லவெனவும், இதனால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிரதமர் பதவிக்கான பாதுகாப்பைக் குறைப்பதற்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்தார்.

அரசியலமைப்புக்கு முரணாக புதிய பிரதமர் நியமிக்கப்பட்டவுடன் பொலிஸ் மா அதிபர் தலைகீழாக மாறி, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பைக் குறைக்க நடவடிக்கை எடுத்தார்.

இப்போது நாம் சொல்கின்றோம். மஹிந்த ராஜபக்ஷ தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமே. இதனால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிரதமருக்கான மேலதிக பாதுகாப்பை  பொலிஸ் மா அதிபர் குறைக்கட்டும்  எனவும்அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment