கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது

292 0

பம்பலப்பிட்டி -மெல்பன் மாவத்தையில் அமைந்துள்ள பிரபலமான நிறுவனம் ஒன்றில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான  சொத்துக்களை கொள்ளையிட்ட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் 21 ஆம் திகதி குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களால் கொள்ளையிடப்பட்ட 10 மடிக்கணனிகள், 12 கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நால்வரும் நேற்று மாலை பொலிஸாரினால் பம்பலப்பிட்டியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இரு சந்தேக நபர்களை கைதுசெய்த போது அவர்களிடமிருந்து  2 கிராம் 118 மில்லி கிராம் மற்றும் 03 கிராம் 114 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் இன்று புறகோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment