மாலைதீவுப் பிரஜை உட்பட இருவர் கைது!

301 0

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் ஒரு தொகை தங்க ஆபரணங்களை கடத்திவர முற்பட்ட  இருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரும் மாலைதீவைச் சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரும் இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சந்தேக நபர்கள் நேற்று இரவு மாலைதீவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தபோது அவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த அதிகாரிகள்,  பயணப்பொதியை சோதனையிட்டபோது மறைத்து கொண்டு வந்த ஒரு  தொகை தங்க ஆபரணங்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கழுத்து மாலை 2 உட்பட இரு தங்கபிஸ்ட்களை பயணப்பொதியில் மறைத்துக்கொண்டு வந்ததையே அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சுமார் 30 இலட்சத்து 48 ஆயிரத்து 810 ரூபா பெறுமதியான 233 கிராம் நிறைகொண்ட ஒரு தொகை தங்க ஆபரணங்களை குறித்த நபரிடமிருந்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளுக்குட்படுத்தியுள்ளதாக  விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a comment