பாராளுமன்றத்தில் நாளை தினம் ஐந்தாவது தடவையாகவும் இந்த சட்ட விரோத அரசாங்கத்தை தோற்கடிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
இந்த அரசாங்கத்துக்கு 85 பேரின் ஆதரவையாவது காட்டிக் கொள்ள முடியாத ஒரு நிலைமை காணப்படுகின்றது. இதனாலேயே அவர்கள் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

