பாராளுமன்றத்தை முறைப்படி கூட்டும் வரை சபை அமர்வுகளில் பங்கேற்க மாட்டோம்!

333 0

பாராளுமன்றத்தை முறைப்படி கூட்டும் வரை சபை அமர்வுகளில் பங்கேற்க மாட்டோம் என ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற ஆளும் தரப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றம் தொடர்ந்தும் சட்ட விரோதமான முறையில் அரசியலமைப்பு மற்றும் நிலையியல் கட்டளைக்கு முரணான வகையிலேயே  கூடி வருகின்றது எனவும் இதன்போது அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தினேஸ் குணவர்தன , நிமல் சிறிபால டி சில்வா , சுசில் பிரேமஜயந்த , விமல் வீரவன்ச , மஹிந்த  சமரசிங்க மற்றும் கெஹிலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

Leave a comment