ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடல் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி இணக்கம் !

499 0

எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடல் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். 

 

குறித்த சந்திப்பை நாளைய தினம் (30-11-2018) முன்னெடுப்பதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஜனாதிபதிக்கும் இடையில் இன்று மாலை 4 மணியளவில் ஜனாதிபதிசெயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பேர் கையெப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலும் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தை மீளமைக்க ஆதரவளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment