யார் வெள்ளைக் கொடியை ஏந்தி வந்தாலும் அதற்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளோம்!

296 0

அரசியல் நெருக்கடியை சமாதானமாக தீர்த்துக் கொள்ள யார் வெள்ளைக் கொடியை ஏந்தி வந்தாலும் அதற்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று சபை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும் நேரத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதி எமது இந்த இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால் நாங்கள் எமது போராட்டத்தை தொடர்ந்து முன் கொண்டு செல்வோம்.

இன்று முழு உலகமும் ஏற்றுக்கொண்ட  ரணில் விக்கிரமசிங்கவையே  பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். இதனையே நாட்டு மக்களும் எதிர்பார்க்கின்றனர் எனவும் இதன்போது கூறினார்

Leave a comment