பார்வையாளர் கலரிக்கு இன்றும் பூட்டு

282 0

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்குகூடிவுள்ள நிலையில், பாராளுமன்றத்தின் பார்வையாளர் கலரி மற்றும் விசேட விருந்தினர் கலரி ஆகியன இன்றும் மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்காக பாராளுமன்றத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாராளுமன்றத்தைச் சுற்றி பலத்த பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று காலை 9 மணியளவில்  சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment