அரச பாடசாலைகளுக்கு 30ம் திகதி முதல் விடுமுறை

315 0

சகல அரச பாடசாலைகளும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக நவம்பர் 30 ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இப்பாடசாலைகள் மீண்டும் 1 ஆம் கல்வி தவணைக்காக 2019 ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகும்.

இம்முறை நாடாளவிய ரீதியில் 6 இலட்சத்து 50 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இப்பரீட்சையானது 4661 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. பரீட்சைக்காக 541 இணைப்பு நிலையங்களும் 33 பிராந்திய நிலையங்களாக கொண்டு பரீட்சை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment