யானை தாக்குதலில் சிறுகாயங்களுடன் உயிர் பிழைத்த சிறுமி

358 0

வவுனியாவில் யானை தாக்கியதில் சிறுமி ஒருவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.ஓமந்தை விளக்குவைத்த குளம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

குறித்த சிறுமி வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வீதியில் நின்றிருந்த யானை தாக்கியுள்ளது. இதனால் சைக்கிளில் இருந்து கிழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்தமையால் சிறுமி சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.பின்னர் அயலவர்கள் வந்ததும் யானை அங்கிருந்து சென்றுள்ளது. விளக்குவைத்தகுளம் பகுதியை சேர்ந்த லக்சிகா வயது 11 என்ற   சிறுமியே சிறு காயங்களிற்குள்ளாகியதுடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.

Leave a comment