இருவர் காணாமல்போன சம்பவம்-5 இராணுவத்தினர் விளக்கமறியலில்

330 0

courts

லெப்டினன் கேணல் யசஸ் வீரசிங்க உள்ளிட்ட ஐந்து இராணுவ உறுப்பினர்களை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
1997ஆம் ஆண்டு இரண்டு நபர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பான வழங்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தேகநபர்கள் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனதாக கூறப்படும் இரண்டு நபர்களும், தமிழீழ விடுதலைப் புலி அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் இதே சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய குறித்த சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று மீள அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் 9 இராணுவ உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.