உதயங்கவுக்கு பிடியாணை எப்போது – 30ஆம் திகதி அறிவிப்பு

327 0

%e0%ae%89%e0%ae%a4%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இந்த மாதம் 30ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.

2006ஆம் ஆண்டு இலங்கைக்கு மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக் கொள்வதற்காக அவர் அவசியப்படுவதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர் இதற்கான அழைப்பை புறக்கணித்து வருவதால் அவரை கைது செய்ய வேண்டும் என்றும், இந்த நிலையில் அவருக்கு எதிராக பிடிவிராந்து பிறப்பிக்குமாறும் அவர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தனர்.

இதனை அடுத்தே நீதிமன்றம் இது குறித்த 30ஆம் திகதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.