தேர்தலை யாராலும் நிறுத்த முடியாது – மஹிந்த

197 0

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தேர்தலை எவராலும் நிறுத்த முடியாது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செய்திப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் தற்போதைய நிலைமையை சர்வதேசம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகம் இதனை ஜனநாயக முறையாக நோக்க வேண்டும், நாங்கள் மக்களிடத்தில் செல்கிறோம், அவர்களது விருப்பங்களை கேட்போம், நாங்கள் சர்வதேசத்திடமும் செல்வோம் அவர்கள் எமது நிலைப்பாட்டை புரிந்துகொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave a comment