ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்க வேண்டும்-விமல் வீரவன்ச

307 0

ஏதேனும் தவறு இழைக்கப்பட்டிருக்குமாயின் பொறுப்பு வாய்ந்த கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்க வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் சமாதான ரீதியில் செயற்படாமல் மோதல் வழிகளில் நாட்டை முன்னெடுப்பதற்கு இந்த கட்சி செயற்பட்டதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையை சரி செய்வதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச கூறினார்.

அமைச்சர் உதய கம்மன்பில கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம் தவறு என்றால் அதற்கு பொதுமக்கள் சரியான பதிலை வழங்குவார்கள் என்று கூறினார். இதேபோன்று முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடு தவறு என்றால் பொதுமக்கள் அவர்களுக்கு தண்டனை வழங்குவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a comment