தேர்தலுக்கு ஏன் சென்றோம்- கோட்டாபய விளக்கம்

413 0

நேரடியாக தலைவர் ஒருவரை நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பு நாட்டு மக்களுக்கு உருவாகியுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு அரசியல் நெருக்கடி நிலைமையொன்று உருவாகியது. இதனையடுத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்தார்.

இதன்போது, மிக விரைவில் மக்கள் கருத்தை அறிவதற்கான வாய்ப்பொன்றை உருவாக்கித் தருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டுத் தூதுவர்களை அழைத்து தான் பிரதமர் எனத் தெரிவித்தார். இதற்கிடையில், சபாநாயகர் கரு ஜயசூரிய வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு கடிதம் ஒன்றின் மூலம் இந்த அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என அறிவித்திருந்தார்.

இதனால், இறுதியாக மக்களின் கருத்தை அறிந்து பார்ப்பதற்கு தீர்மானம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். களுத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற “எளிய” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment