கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

199 0

மொரட்டுவ, கடுபெத்த பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 28 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும், கல்கிஸ்ஸை, பிலியந்தல, மொரட்டு, பாணந்துறை, களுத்துறை மற்றும் அளுத்கமை போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் இவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment