தேர்தல் மூலம் பெற்றுக்கொண்ட பெரும்பான்மையையும் இது வரை காலம் நாட்டில் நிலவிவந்த அரசியல் சம்பிரதாயங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுக்கு நூறாக்கியுள்ளார்” என பாராளுமன்ற உறுப்பினறும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு பாராளுமன்றை கலைத்து பொதுத்தேர்தலை அறிவித்ததை தொடர்ந்து வானொலிச் சேவை குறித்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் மனோ கணேசன் தெரிவித்ததாவது,
“ஜனாதிபதியின் இச் செயற்பாடானது இலங்கையின் அரசியலமைப்பிற்கு முற்றிலும் முரணானது. இதற்கான சட்ட நடவடிக்கையை நாம் மேற்கொள்ளவுள்ளோம்.
அதே வேளை எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராகவுள்ளது.” என தெரிவித்தார்.