வடக்கிலிருந்து படையினரை அரசாங்கம் ஒருபோதும் அகற்றமாட்டாது

290 0

ruwan-wijewardenaவடக்கிலிருந்து படையினரை வெளியேற்றுமாறு நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் தெரிவிக்கப்பட்டது. வடக்கிலிருந்து படையினரை அரசாங்கம் ஒருபோதும் அகற்றமாட்டாது என சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற எழுக தமிழ் தொடர்பாக கருத்துக் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்துவரும் வேளையில், இத்தகைய கடும்போக்குவாத செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளமுடியாது.

படைமுகாம்களை அகற்றுமாறு நேற்றையதினம் (சனிக்கிழமை) வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் இனவாதப்போக்குடையவர்களால் பேரணி நடாத்தப்பட்டது. அத்துடன் அங்கு ஆலயங்களைக் கட்டவேண்டாம், வெளியிடத்தவர்களை குடியேற்றவேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் அரசாங்கம் படைமுகாம்களை அகற்றாது. இவர்களின் சவால்களைக் கண்டு நாங்கள் ஒருபோதும் பயப்படப்போவதுமில்லை.