கைது செய்யப்பட்ட மஹிந்தானந்தவின் மகனுக்கு பொலிஸ் பிணை

251 0

pinaiமது போதையில் வாகனம் செலுத்தியதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட கனிஸ்க அளுத்கமகே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், நாளை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இவரை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மது போதையில் வாகனம் செலுத்தியதாக குற்றம்சுமத்தப்பட்டு மஹிந்தானந்த அளுத்கமகேவின் புதல்வர் கனிஸ்க அளுத்கமகே நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.