தங்கத்துடன் மூவர் கைது

215 0
7 கிலோ தங்கத்துடன் மூவர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்பன்தீவு மற்றும் கிம்புல்பொக்க கடற்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக கடத்திச் செல்ல முற்பட்ட 7 கிலோ தங்கம் சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

40, 42 மற்றும் 45 வயதுடைய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்கம் கடத்த முற்பட்ட டிங்கி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment