இன்னும் 10 பேர் புதிய அரசாங்கத்துடன் இணையவுள்ளனர்- வாசு

228 0

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இன்னும் 10 பேர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள் நேற்று (03) நடாத்திய கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வது தொடர்பிலும், பாராளுமன்றத்தைக் கூட்டும் போது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்துமே நேற்றைய கூட்டத்தில் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment