பாராளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை உண்டு – ரணில்

230 0

புதிய அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாமையினாலேயே அவர்கள் பாராளுமன்றத்தைக் கூட்டாமல் ஒத்திவைத்து வருகின்றனர் எனக் குற்றம் சாட்டிய முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமக்கே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சர்வதேச செய்தி ஊடகமான அல்ஜெஸீரா சேவை தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமை குறித்து கேட்ட போதே முன்னாள் பிரதமர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

பாராளுமன்றத்தைக் கூட்டும் வரையில் தான் அலரிமாளிகையை விட்டும் வெளியேற மாட்டேன் எனவும் முன்னாள் பிரதமர் மேலும் கூறியுள்ளார்

Leave a comment