புதிய அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவைக் காட்டும் பாரிய கூட்டம் நாளை

223 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்த புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை (05) நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது.

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவுள்ள சகல கட்சிகளின் ஆதரவாளர்களும் இதன்போது ஒன்றுகூடவுள்ளனர். ஐந்தாயிரம் பஸ்களில் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஆதரவாளர்கள் அழைத்து வரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்துடன் இணைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. கட்சி என்பவற்றின் ஆதரவாளர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a comment