ஐக்கிய தேசிய கட்சியின் பலர் எம்முடன் இணையவுள்ளனர் – மஹிந்தானந்த

227 0

ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து பிரதமர் பதவி பறிபோனதை போன்று எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பதவிகளும் பறிபோகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத கட்சியின் ஏராளமான உறுப்பினர்கள் எதிர்காலத்தில் அரசுடன் இணைந்துகொள்ளவிருப்பதாகவும் அரசில் இணைத்துக்கொள்வதற்காக எவருக்கும் பணம், சலுகைகள் வழங்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்தரமுள்ள நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment