பாராளுமன்றம் 7ம் திகதி கூடுகிறது

257 0

பாராளுமன்றம் எதிர்வரும் 7ம் திகதி கூட்டப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி பாராளுமன்றத்தை 7ம் திகதி கூட்டுமாறு தெரிவித்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களுடன் இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்திலேயே சபாநாயகர் இதனை தெரிவித்த்துள்ளார்.

பாராளுமன்றத்தை ஜனாதிபதி உடனடியாக கூட்ட தவறும் பட்சத்தில் சபாநாயகருக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கூட்டுமாறு குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.(

Leave a comment