அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல் ஊடகம் அரசாங்க தகவல் திணைக்களமே-நாலக்க கலுவெவ

272 0
அரசாங்க தகவல் திணைக்களம் அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்ததும் நிறுவனமே என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட பின்னர் இன்று காலை திணைக்களத்தின் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கடந்த 26ம் திகதி ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை அடுத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களால் நியமிக்கப்பட்ட உயர் பதவி நியமனங்களில் எனது நியமனம் இரண்டாவதாக இடம்பெற்றது.

நான் ஒரு அரசாங்க ஊழியர். கடந்த பல வருடகாலமாக இத்துறையில் சேவையாற்றி வருகின்றேன். எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதே எனக்கு தற்பொழுதுள்ள கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு உள்ளிட்டவை எத்தகைய அரச தகவல்களை வெளியிட்டாலும் அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தகவல்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களம் பொறுப்பானதாகும்.

எனவே நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் நிலைப்பாடு உள்ளிட்ட விடயங்களை உரிய முறையில் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு திணைக்களத்தை சார்ந்ததாகும்.

எனவே இன்றைய சூழ்நிலையில் தகவல் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களும் தமக்குள்ள பொறுப்புக்களை உணர்ந்து வேறுபாடுகளுக்கு அப்பால் சேவையில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.

Leave a comment