ராதா கிருஷ்ணனின் ஆதரவு ரணிலுக்கு, இன்று அறிவிப்பு

4198 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுச் செல்லாதிருக்க தீர்மானம் எடுத்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. ராதா கிருஷ்ணன் இன்று (29) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியிடமிருந்தும், பிரதமரிடமிருந்தும் கிடைத்த அழைப்பை ஏற்று அவர்களைச் சந்திக்கச் சென்றதாகவும், இருப்பினும், ஐ.தே.க.யுடன் தொடர்ந்தும் இருப்பதே தமது தீர்மானம் எனவும் அவர் கூறியுள்ளார்.

வீ. ராதா கிருஷ்ணன் மற்றும் ஆனந்த  குமார் ஆகியோர் இன்று(29) ஐ.தே.க.யின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும், பின்னர் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக கையெழுத்திட்டு கடிதம் வழங்கியுள்ளதாகவும் தமிழ் முற்போக்கு அமைப்பின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Leave a comment