மீண்டும் இனத்துரோகத்தை உறுதி செய்த டக்ளஸ் தேவானந்தா!!!(காணொளி)

398 0

நாட்டில் ஏற்பட்டு அரசியல் குழப்பநிலையை அடுத்து, இன்று புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது.

குறித்த அமைச்சரவையில் 12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், 1 பிரதி அமைச்சர், 1 இராஜாங்க அமைச்சர் என மொத்தமாக 14 அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில், நாட்டின் பாதுகாப்பு அமைச்சரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால முன்னிலையில், மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத நகரப் பகுதி மற்றும் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆதரவான பகுதிகளில் அவர் அமைச்சராப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதையடுத்து, வாண வேடிக்கைகள், பட்டாசுகள் கொழுத்தி அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளானதையும் அவதானிக்க முடிந்தது.

கடந்த 2009ஆம் ஆண்டில் தமிழ் இனப்படுகொலையை முன்னின்று நடாத்திய அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு, டக்ளஸ் தேவானந்தா ஒட்டுக்குழுவாக செயற்பட்டு வந்த நிலையில், தற்போது மஹிந்த ராஜபக்ச பிரதமராகியுள்ளதையடுத்து, தொடர்ந்தும் அவருக்கு ஆதரவு வழங்கி மீண்டும் தமிழ் இனத்துரோகி என்பதை உறுதி செய்துள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Leave a comment