DIG நாலக்க சில்வா கைது

225 0

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா  குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐந்தாவது நாளாகவும் இன்று (25) வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட அவர் இன்று இரவே கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்ய சதி செய்தமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து வாக்கு மூலம் வழங்கவே அவர் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தந்துள்ளார்.

Leave a comment