பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் போர்வையில் அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய சட்ட மூலம் அதனை விடவும் ஆபத்தானது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட மூலத்தை தோல்வியடையச் செய்வதற்கு அடுத்து வரும் நாட்களில் செயற்படப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.