நான்கு அமைச்சர்கள்; கண்டறிவோம்!

220 0

இந்திய இரகசியப் புலனாய்வுச் ​சேவையான றோ, தன்னைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்துள்ளதாக, 16ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்துள்ளாரென ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நான்கு அமைச்சர்கள் யார் என்பதை கண்டறிவோம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், அமைச்சரவையில் கலந்துரையாடப்படாத விடயத்தை, திரிபுபடுத்தி எவ்விதமான பொறுப்புமின்றி, இரண்டு நாடுகளுக்கு இடையில், இவ்வாறான முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதற்கு முயற்சிப்பவர் யாரென, தேடியறிவேண்டும். இதனால், பாரிய அனர்த்தம் ஏற்பட்டுவிட்டது.

ஜனாதிபதி, நேற்றைய நாள் முழுவதையும் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக​  செலவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment