வீர துட்டகைமுனு இயக்கம் மேர்வின் சில்வாவின் தலைமையில் உதயம்

477 0

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வீர துட்டகைமுனு இயக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி அனுராதபுரத்தில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இதனை அறிவித்தார்.

வடக்கிலும், கிழக்கிலும் இனவாதம் உருவாவதை அனுமதிக்க முடியாது. கடந்த மன்னர்களது ஆட்சியின் போது இந்நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பேகர் ஆகிய சகலரும் ஒற்றுமையாக வாழ்ந்துள்ளனர்.

சிங்களவர்களுக்கு இந்நாட்டில் இருந்த உரிமைகள் இல்லாமல் போவதை அனுமதிக்க முடியாது. அதனை மீளவும் பெற்றெடுப்பது இந்த அமைப்பின் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷவின் குழுவும், ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கமும் இந்நாட்டிலுள்ள சிங்களவர்கள் வீழ்ந்துள்ள பாதாளத்திலிருந்து மீட்டுப்பதற்கு தவறியுள்ளன. இவர்கள் வடக்கிற்குச் சென்று தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர். கிழக்குக்குச் சென்று முஸ்லிம் மக்களை ஏமாற்றுகின்றனர் எனவும் மேர்வின் சில்வா மேலும் கூறினார்.

Leave a comment