நாகர் கோவில் மாகாவித்தியாலை விமான தாக்குதலின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் (படங்கள் இணைப்பு)

322 0

14370377_1160935507320208_7366175879504757617_nயாழ்ப்பாணம் – நாகர் கோவில் மகா வித்தியாலயத்தின் மீது விமான படை நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்ரிக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் குறித்த பாடசாலையில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி முன்பாக இந் நினைவு தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவு தூபியானது நாகர் கோவில் மகாவித்தியாலையத்தின் அவுஸ்திரேலியா பழைய மாணவர்களினால் அமைக்கப்பட்டிருந்தது.
இந் நினைவு தூபியின் முன்பாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இதில் கலந்து கொண்டவர்கள் நினைவு தூபியில் மலர்கள் தூவியும், தீபங்களை ஏற்றியும் தமது அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.

14390650_1160935370653555_6192989906403606324_n 14390759_1160935413986884_2147680904598951663_n 14370377_1160935507320208_7366175879504757617_n