சிறுமியை கோரமாக அடித்து சித்திரவதை செய்த சிறிய தாய் கைது (படங்கள் இணைப்பு)

302 0

vlcsnap-2016-09-22-16h33m07s134யாழ்.நீர்வேலி பகுதியில் சிறிய தாயாரின் பராமரிப்பில் வளர்ந்து வந்த சிறுதி ஒருவர் மிக மோசமான முறையில் சித்திரவதை செய்யப்பமை தொடர்பில் குறித்த சிறிய தாயார் கோப்பாய் பொலிஸாரினர் இன்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தாயார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும், அவரை நாளை வெள்ளிக்கிழமை யாழ்.நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது:- பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் உயிரிளந்த நிலையில் அவர் சிறிய தாயாரின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.
சிறிய தாயாரின் பாதுகாப்பில் வளர்ந்து வந்த சிறுமி அவரால் மிக மோசமாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இன்றும் குறித்த சிறுமி வீட்டிற்கு பின்புறமாக சென்று குளிப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்த வேளை அங்கு வந்த சிறிய தாயார் அச் சிறுமியை தலை முடியில் பிடித்து இழுத்து கீழே விழுத்தி கத்தியாலும், கையாலும் கோரத்தனமாக தாக்கியுள்ளார்.
இச் சம்பவம் அயர் வீட்டில் உள்ள ஒருவரால் வீடியோ பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இதனை யடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிறுமியை சித்திரவதை செய்த சிறிய தாயாரை கைது செய்துள்ளனர்.

vlcsnap-2016-09-22-16h30m28s930 vlcsnap-2016-09-22-16h30m59s432 vlcsnap-2016-09-22-16h31m21s170 vlcsnap-2016-09-22-16h32m05s412 vlcsnap-2016-09-22-16h32m29s400 vlcsnap-2016-09-22-16h32m41s605 vlcsnap-2016-09-22-16h33m18s475