பாரிஸ் உடன்பாட்டில் இணையும் உறுதிப்பத்திரத்தினை பான்கிமூனிடம் கையளித்தார் மைத்திரி

327 0

ban-ki-moon-msகாலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்பாட்டில், சிறிலங்கா இணைந்து கொள்வது தொடர்பான உறுதிப்பத்திரத்தை, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கையளித்தார்.

நியுயோர்க்கில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற அமர்வின்போதே குறித்த உறதிப்பத்திரத்தினை வழங்கியுள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பான உடன்பாட்டில் சென்ற வருடம் 195 நாடுகள் மற்றும் அமைப்புக்கள் பாரிஸ் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு இணக்கங்கண்டிருந்தன.

இந்த உடன்பாட்டில் சிறிலங்காவின் சார்பில் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த கடந்த மே மாதம் கையெழுத்திட்டிருந்தார்.