புலமைப்பரிசில் பெரும் மாணவர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை-அகில

181 0

தரம் 5 புலமைப்பரிசில் பெரும் மாணவர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்துவதற்கும், புலமைப்பரிசில் நிதியை அதிகரிக்கவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மத்தியில் கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை பாடசாலை கிரிக்கட் தொடர்பில் ஊடகங்களை அறிவுறுத்தும் ஊடகவியலாளர் மாநாடு அண்மையில் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்பொழுது, வருடாந்தம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்கி புலமைப்பரிசில் பெரும் மாணவர்களின் எண்ணிக்கை 15,000 என்பதுடன் அவர்களுக்கு மாதாந்தம் 500 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment