ஞானசாரவின் மேன் முறையீட்டு மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

172 0

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக செய்துள்ள மேன் முறையீட்டு மனுவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05ம் திகதி விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு இன்று நீதியரசர்களான ஈவா வனசுந்தர, விஜித் மலல்கொட ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், இன்றைய தினம் நீதியரசர்கள் குழாம் சரியாக ஒழுங்கமைக்கப்படாமையால் மனுவை ஒக்டோபர் 05ம் திகதி வரை பிற்போடுவதாக நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment