கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், உயர்தரம் ஆகிய பரீட்சைகளை டிசெம்பர் மாதத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

மாணவர்கள் கால தாமதம் இன்றி உயர்தரக் கல்வியை தொடர முடியும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பின்னர் உயர் கல்வியை தொடர்வதற்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. உயர் தரப் பரீட்சையின் பின்னர் பல்கலைக்கழத்தில் அனுமதி பெறுவதற்கு அதிக காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.

 

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக மூடப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கையை இயலுமான வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு எதுவித தடைகளும் ஏற்படாத வகையில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அறிவுரைகளை அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்தி எய்திய பின்னர் பல்கலைக்கழக பிரவேசத்திற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு இடைப்பட்ட காலத்தை பயனுள்ளதாக கழிப்பதற்கு விசேட வேலைத் திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் என்று அவ்ர் மேலும் தெரிவித்தார்.