கு.வன்னியசிங்கத்தின் 57 வது நினைவுப்பேருரை நிகழ்வு இன்று (காணொளி)

542 0

vanniyasingam-ninaivu-nal-20-09-2016pho

  • முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோப்பாய் கோமான் அமரர் கு.வன்னியசிங்கத்தின் 57 வது நினைவுப்பேருரை நிகழ்வு இன்று நடைபெற்றது.
    யாழ்ப்பாணம் நீர்வேலி வாழைக்குலைச்சங்கத்திற்கு முன்னால் அமைந்துள்ள அமரர் கு.வன்னியசிங்கத்தின் நினைவிடத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதியின் தலைமையில் நடைபெற்ற நினைவுப்பேருரை நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், மறவன்புலவு சச்சிதானந்தம் உட்பட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு அமரர் கு.வன்னியசிஙகத்தின் நினைவுச்சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.
    நிகழ்வில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
    அத்துடன் தெரிவுசெய்யப்பட்ட வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட அறுபத்தைந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கிவைக்கப்பட்டது.