இ.போ.ச. பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பில் 11 டிபோ ஊழியர்கள்

190 0

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பித்துள்ள ருகுணு பகுதி இ.போ.ச. பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பில் 11 டிபோ ஊழியர்கள் தற்பொழுது இணைந்துள்ளதாகவும் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படாவிடின், ஏனைய பகுதிகளிலுள்ள ஊழியர்களையும் இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திர தேசிய போக்குவரத்து சேவை ஊழியர் சங்கத்தின் செயலாளர் பந்துல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இ.போ.சபை தலைவர் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையில் இன்று (02) பிற்பகல் 2.00 மணிக்கு காலி பிரதேச சபைக் காரியாலயத்தில் இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் பந்துல ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்

Leave a comment