துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

252 0

வலஸ்முல்ல, கனுமுல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று (31) இரவு இனந்தெரியாத ஒருவரால் வீடொன்றின் அறையில் இருந்த நபர் ஒருவருக்கு ஜன்னல் ஊடாக துப்பாக்கிச் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக தங்காளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காணிப் பிரச்சினை ஒன்று காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்று தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment