கிளிநொச்சி திருமுருகண்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 09ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
14 வயதுடைய முருகேசு அபிசாலினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை என்பதுடன், மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.