கொழும்பு நகர போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக இலகு ரயில் சேவையொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை இவ்வருட இறுதியில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பு நகர அபிவிருத்தி தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.