பாணந்துரை பொலிஸில் கடமையாற்றும் பெண் தீயில் கருகி மரணம்

249 0

பாணந்துரை வலான ஊழல் ஒழிப்பு பிரிவில் சேவையாற்றும் 23 வயதுடைய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஹாலிஎல ஜகுல்லவிலுள்ள தனது வீட்டிற்குள் மர்மமான முறையில் தீ யில் கருகி உயிரிழந்துள்ளார்.

சந்திமா பிரியதர்ஷனி சந்திரசேகர என்பவரே இவ்வாறு உயரிழந்துள்ளார்.

இவர் விடுமுறையில் இன்று வீட்டுக்கு வந்தபோது அடுத்த வீட்டில் மரண வீடொன்றுக்கு சென்றுள்ளார்.  இறுதியாக தனது காதலனை சந்தித்துள்ளார். பின்னர் இன்று(01) நண்பகல் வீட்டுக்கு வந்துள்ளார்.

வீட்டிற்குள் தீப்பற்றி எரியும் காட்சியைக் கண்ட அயல் வீட்டவர்கள், சம்பவ இடத்துக்குச் செல்லும் போதே இவரது உடல் தீயில் கருகி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீச் சம்பவத்தில் வீட்டின் கூரைக்கும் பொருட்களுக்கும் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஹாலிஎல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment