இந்தியாவின் கொச்சின் விமான நிலையம் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதையடுத்து மூடிவிடப்பட்டுள்ளதால் பயணிகள் எதிர்கொண்டுள்ள சிக்கலை தடுப்பதற்காக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொச்சின் விமான நிலையம் எதிர்வரும் 26ம் திகதி வரையில் மூடப்பட்டுள்ளதாக அந்த விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொச்சின் விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு வருவதற்காக பிரவேசப்பத்திரம் பெற்றுக் கொண்டுள்ள பயணிகள் தென் இந்தியாவின் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் செயற்படக் கூடிய எந்தவொரு விமான நிலையத்தில் இருந்தும் தமது பயணங்களை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக எந்தவொரு மேலதிக கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது என்றுஸ்ரீலங்கன் விமான நிறுவனம் கூறியுள்ளது.
அதேவேளை கொழும்பில் இருந்து கொச்சினுக்கு பிரவேசப்பத்திரம் பெற்றுக் கொண்டுள்ள பயணிகள் தென் இந்தியாவின் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் செயற்படக் கூடிய எந்தவொரு விமான நிலையத்திற்கும் பயணிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன்விமான நிறுவனம் கூறியுள்ளது.