அரச சேவையில் நிலவுகின்ற சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வேண்டும்

190 0

புதிய சம்பள ஆணைக்குழுவினால் அரச சேவையில் தற்போது நிலவுகின்ற சம்பள முரண்பாடுகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. 

புதிய சம்பள ஆணைக்குழுவின் நோக்கம் மற்றும் இலக்கை அரசாங்கம் தௌிவுபடுத்த வேண்டும் என்று அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார்.

Leave a comment