களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு

191 0

தற்போது பெய்துவருகின்ற மழை காரணமாக களனி கங்கையின் நீர் மட்டம் ஓரளவு அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிவதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று (16) மற்றும் நேற்று முன்தினம் ஆகிய இரு தினங்களில் நீர் மட்டத்தில் சிறிய அதிகரிப்பை அவதானிக்க முடிந்ததால் அதனை அண்டிய பிரதேச மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.

தற்போதிருக்கின்ற மழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் 03 வான் கதவுகள், கெனியன் நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள், காசல்ரீ நீர்த் தேக்கத்தின் இரண்டரை அடி வீதம் 02 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் கூறியுள்ளது.

Leave a comment