வாத்துவ சம்பவம்; இருவரும் மீண்டும் விளக்கமறியலில்

188 0

வாத்துவ பகுதியில் உள்ள ஹோட்டலில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீடமடைந்திருந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

களியாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்த நிறுவனம் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரின் கணவன் மற்றும் பிரச்சார அதிகாரி ஆகிய இருவரும் கடந்த 09ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இரண்டு பேரும் இன்று 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களின் விளக்கமறியலை மேலும் நீடிக்க பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி இருவரும் எதிர்வரும் 27ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வாத்துவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீடமடைந்த நான்கு பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தனர்.

Leave a comment