பரீட்சை கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க ஆலோசனை-அகிலவிராஜ்

171 0

பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பரீட்சைகள் ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிள்ளைகளுக்காக பாரிய அர்ப்பணிப்பு செய்கின்ற ஆசிரியர்களின் வசதிகள் மற்றும் வரப்பிரசாதங்களை அதிகரிப்பதேயன்றி குறைப்பதற்கு ஒருபோதும் தான் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் வௌியிட்டுள்ள அறிக்கை மூலம் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

பாடசாலை விடுமுறைக் காலங்களில் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்துவதற்கு தான் முயற்சிப்பதாக சமூக ஊடகங்களில் வௌியாகியுள்ள பொய்யான செய்தி சம்பந்தமாக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கல்வித் துறைக்காக செயற்படுத்தியுள்ள பாரிய வேலைத்திட்டங்கள் ஊடாக கிடைக்கின்ற பிரதிபலன்கள் தொடர்பில் கோபமடைந்துள்ள குழுக்கள் கீழ்த்தரமான அரசியல் நிகழ்ச்சி நிரலை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Leave a comment